கொஞ்சம் இப்படியும் இருக்குமடி உலகம்
நெனைச்சு அப்படியும் இருக்குமடி உலகம்
எப்படியும் நடக்குமடி உலகம் -தெரிஞ்சும்
எப்படியும் நடக்குமடி உலகம் .
கோடு போட்டு நிக்காதடி உலகம்
பெரிய ரோடு போட்டும் போகாதடி உலகம்
புத்தனையும் பாத்ததடி உலகம்
பல சித்தனையும் பாத்ததடி உலகம்
ஏசுவோ, அல்லாவோ
ஹிட்லரோ, நீட்சேவோ
வீரப்பனோ, ஒபாமாவோ
நீயுமோ, நானுமோ...
அத்தனையும் பாக்குதடி உலகம் ....
அதையும் நிக்காம பாக்குதடி உலகம் ...
கயிறு போட்டு தண்ணியத்தான் கட்டப்பாக்குறான் -மனுஷன்
காத்த புடிக்க வலையத்தான் வீசிப்பாக்குறான் .
இல்லாத தூரத்த அளந்து பாக்குறான் -மனுஷன்
கைக்குள்ள அகிலத்த அடக்கப் பாக்குறான்
போற வழி வர்ற வழி போட்டு வைக்கிறான்-அதுவும்
திரும்பும்போதே மறைஞ்சு போக மலைச்சு போகுறான் ..
இப்படித்தான் இருக்கணும் ....
அப்படித்தான் இருக்கணும் ....
மனசு கெடந்து அடிக்குதடி
காலம் முழுசும் ....
இப்படின்னும் இல்லாம ...
அப்படின்னும் இல்லாம ...
எப்படியும் இருக்குதடி இந்த உலகம் ...
அதில ....
எப்படியும் இருந்துக்கடி காலம் முழுசும் ...
அகில ...
உலகத்தோடு ஒத்துப்போடி சாகும் வரைக்கும் .....