கவிதை எழுதென்று
கண்மண் தெரியாத ஆணை.
கேட்ட மொழியிலெல்லாம்
வார்த்தைகள் ஓடிவந்து
சப்பணம் போடுகிறது.
கேட்காத மொழியின்
சப்தங்களெல்லாம்
சரிக்கு சரி வந்து நிற்கிறது.
கண்ணிமை மட்டும்
கொட்ட கொட்ட
முழிக்கிறது ...
எண்ணங்கள் என்பதை
எங்கேயும் காணோமென்று !!!
கவிதை என்ன பாடு படுத்தும் எழுதி முடிப்பதற்குள்.. என்று நானும் அறிவேன், அதனாலேயே ரசிக்க முடிந்தது..
ReplyDelete