அவள்.....
சுழித்தோடும் மரகதம்.
தழுவிடும் மரப்பாலம்.
குளிர்ந்தது மர நெஞ்சம்.
விரகம் கொஞ்சம் மிஞ்சும்.
வெண்மணல் தொட்டாடும்,
புற்கீற்றை இழுத்தாடும்.
ஏங்கி நின்ற பாறைதனை
மோகத்தில் முழுக்காட்டும்...
கண்மலர பார்க்க விட்டு
இதழ் சுழித்து பாய்ந்தோடும்.
கண்மூடி வசமிழக்க
ஸ்ருங்கார பாட்டிசைக்கும்
ஏனோ..
மோதிவரும் காற்றோடு மட்டும்
நில்லாது சரசமிடும் !!
சாந்தினி
No comments:
Post a Comment
என்ன சொன்னாலும் தப்பில்ல !!