Monday, March 29, 2010

மீண்டும் ஒரு தலைமுறை ....

பூட்டன் ஒன்று
முப்பாட்டன் பத்து
தாத்தன் நூறு
அப்பன் ஆயிரம்
மகன் பத்தாயிரம்
அவன் மகன் நூறாயிரம்
இன்னும் இன்னும் ஆயிரங்கள் ...

கருவில் பிறந்து
கண்ணைத் திறந்து....
அடித்துப் பிடித்து
ஆறடி வளர்ந்து...
முட்டி மோதி
மெத்தப்  படித்து...
உருகி உடைந்து
காதல் புணர்ந்து ...
துரத்தி வருத்தி
செல்வம் குவித்து ..
வானம் பார்த்து
கேள்விகள் கேட்டு ...
உழைத்து சலித்து
புகழைத் தேடி ...
ஆயிரம் அர்த்தம்
கண்டு தொலைத்து .....
களைத்து தேய்ந்து
மண்ணில் கரைய ....

மீண்டும் ஒரு தலைமுறை ....

No comments:

Post a Comment

என்ன சொன்னாலும் தப்பில்ல !!