Thursday, March 11, 2010

வசந்தம் வருகிறது ....

வசந்தம் வரப்போகிறது இன்னும் சில வாரங்களில் ...
எப்போதும் பிடிக்கிற வசந்தம் ..
வாசத்துடன் வருகிற வசந்தம் ....
மழையை குடித்து சந்தோஷ பூ பூக்கும் மலை வெளிகள்..
எனக்குள் வாவென்று பல சிர கரங்கள் கொண்டு அழைக்கின்றன.
பாறைகள் படர்ந்து, கற்கள் உருண்டு கிடக்கும்
புல்வெளிகளால் அவை நிறைந்துள்ளன..
ஆங்காங்கு நிறுத்தி வைத்த பல கைகள் கொண்ட கம்பங்களாக
காக்டஸ் மரங்கள்....
ஒவ்வொரு மழைக்கும் வானம் நிறைய வாசம் நிரப்பும்
க்ரியோசொட் புதர்கள் ....
சிறு மழைக்கும் நெளிந்தோடும் சிற்றோடைகள் ...
பூக்களையும் அவ்வப்போது என்னையும் நெடுநேரம்
எதிர்கொள்ளும் ஹம்மிங் பறவைகள்....
மெலிதாய் சூடேறும் காற்று,
அதிகாலையில் குளித்த ஈரத்தின் சுவடுகளை
கழுத்தின் ஓரமாய் வருடிச்செல்லும் ...
ஆம் வசந்தம் வருகிறது .....என் வாசல் தேடிக்கொண்டு ...

1 comment:

  1. புலனாகும் பொருட்களில் புலனாகா ஆனந்தம் கொப்பளிக்கும் வரிகள்..

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!