Saturday, March 27, 2010

பிறந்துவிட்டது

அலையலையாய் எழுத்துக்கள் 
கண்வழியே அசைந்தாடும்
இல்லாத கவிதைகள் 
மனசுக்குள் கூத்தாடும் 

புரியாத ராகங்கள் 
உதடுகள் முணுமுணுக்கும்
விரல்கள் கீபோர்டில் 
நில்லாது தாளமிடும் 

காதோர குரலொன்று 
விடாது ஆர்ப்பரிக்கும் 
படைத்தலின் தாகம் 
சந்தோஷ கூச்சலிடும் 

ம்ம்  ...பிறந்துவிட்டது கவிதை .

-- 

2 comments:

  1. ம்ம் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் இதை .:) அழகு வெளிப்பாடு

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!