Wednesday, May 26, 2010

முகமூடியும் சௌகர்யமும்

பிறரை வருத்துதல் கூடாது

என்பது புரிந்த நிமிடத்திலிருந்து

முகமூடி அணிவது வழக்கமாகிவிட்டது !



நல்ல மனசு என்று

பிறர் சொல்வதற்காகவும்

சில காரியங்களை

சாதித்துக்கொள்ளவும் கூட

அது பயன்படவே செய்கிறது.



ஆனாலும்....



நான் முகமூடி அணிந்துள்ளேன்

என்று சொல்வதைவிடவும்

எனை சரியாய் பார்க்கும் வல்லமை

பிற கண்களுக்கு இல்லை

என்று சொல்வதில்

மனசுக்கு இன்னும் சௌகர்யம்தான் !

4 comments:

  1. அப்படி போடு .என்ன ஒரு உண்மை உங்க கவிதையில ...
    சிலசமயம் முகமூடி அப்படியே நமக்கு பொருந்தி போகவும் கூடும் ..
    நல்லதிற்காக நல்லதாக அணியும் பொது இருக்கட்டும் என விட்டு விடலாம் .
    பட் இந்த நம் real self ஐ யாராவது கண்டு பிடிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் உள்ளூரவும் இருக்கும் ..அருமை

    ReplyDelete
  2. Thanks Padma.

    Thanks Vasanth. But I think you didn't complete your comment.

    ReplyDelete
  3. en muga mudiyaa kizhichiteenga :))

    ReplyDelete
  4. உமா,
    ஓ... இதுதான் உங்கள் முகமூடியுமா ??
    நன்றி.

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!