Thursday, November 11, 2010

என் தமிழ்




என் தனிமைக்கு தமிழை பிடித்திருக்கிறது ! 

என் உணர்வுகள் 
தள்ளி நிற்கையில் 
தமிழ் வாய் மூடி 
சிரிக்கிறது. 

தமிழை தழுவும்
விரல்களினூடாக
பரவசம் 
ஆன்மாவில் ஊடுருவுகிறது 

பரவசத்தின் ஊற்றில் 
மனிதர்களும் 
கனவுகளும் 
சிதறுகிறது  


எத்தனை முறை 
தொலைந்து போனாலும் 
மீண்டும் மீண்டும் 
என்னை கண்டெடுக்கிறது 
என் தமிழ். 

கண்டெடுக்கும் போதெல்லாம் 
கண் பார்த்து சொல்கிறது 
உன் தனிமை எனக்கு பிடித்திருக்கிறதென்று ! 

4 comments:

  1. //எத்தனை முறை
    தொலைந்து போனாலும்
    மீண்டும் மீண்டும்
    என்னை கண்டெடுக்கிறது //

    நமக்கு பிடித்த எல்லா விசயங்களும் அப்படி தான்!

    ReplyDelete
  2. தமிழ் துணையிருந்தால் தனிமையை வெல்லலாம் . உண்மை தான்.

    ReplyDelete
  3. தனிமையே இனிமை


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!