உன் பார்வையில் ஒரு விடியல்
கருவானின் செரிந்தடர்ந்த
விண்மீன்களான
என் எண்ணங்கள்
உன் முக சூரியன் கண்டதும்
வெளிர்ந்தன....
வாழ்வின் சூட்சுமம் !!
என் வாழ்வின்
நிமிடங்கள் அனைத்தும்
நியாயமாக்கப்பட்டவை.
அது இல்லாத தருணங்களில்
நான் இறந்திருக்கக் கூடும். ...
அன்பைத் தேடி ...
அன்பே சாஸ்வதமென்று
புரிந்தும், அறிந்தும்
தேடுகிற வாழ்க்கையில் ....
என் தேடல் உயர்ந்தது....
உனக்காக செலவிட
எனக்கு நேரமில்லை !!
வித்தை
நீ என் வாழ்வு
நீ என் பயணம்
நீயே என் உயிர் ....
என் விருப்பம் புரிந்து நடந்து கொள் ....
கவிதை தான் உங்கள் களமா?
ReplyDeleteஅன்பை தேடி, வித்தை என்னை கவர்ந்துள்ளது.
my claps for anbai thedi ...
ReplyDeleteகருவானின் செரிந்தடர்ந்த
ReplyDeleteவிண்மீன்களான
என் எண்ணங்கள்
உன் முக சூரியன் கண்டதும்
வெளிர்ந்தன....Lovely....:))