Thursday, April 1, 2010

சாக்காடு தேடிவரும் !!

வந்தது கருவுல


போறது எதுவர?

யாருக்கும் தெரியல

தேடலும் நிக்கல !!!



நேத்து நடந்தது

நாளைக்கு நடப்பது

ஏன்னு தெரியணும்

எதுக்குன்னு புரியணும் !



அன்பு வச்சாலும் கேள்வி

வைக்காட்டியும் கேள்வி

நம்புனாலும் கேள்வி

நம்பாட்டியும் கேள்வி !



காசு வந்தாலும் கேள்வி

வராட்டியும் கேள்வி

செத்தாலும் கேள்வி

சாக அடிச்சாலும் கேள்வி !



ஒருநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் முட்டாளு

பலநாள் பொழப்புக்கு

யோசிச்சவன் புத்திசாலி !



ஆயுளுக்கும் சேத்துவச்சு

யோசிச்சவன் அறிவாளி

யுகத்துக்கும் பொறுப்பெடுத்து

யோசிச்சவன் ஆன்மீகி !



இந்த நொடி சந்தோஷத்தை

ஒருநாளும்,  பலநாளும்

ஆயுளும், யுகமுமாய்

யோசிச்சு தொலைச்சுட்டு,



என்ன பேரெடுத்தா

யாருக்கு என்ன வரும்?

அலுப்பும் சலிப்பும்தான்

சாக்காடு தேடிவரும் !

2 comments:

  1. அலுப்பு எனக்கில்லை பத்மா !
    சலிப்பாயும், அலுப்பையும் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும்,
    அந்தந்த நிமிடங்களின் சுகத்தில் திளைக்க முடியாதவர்களின் இயலாமை குறித்த பரிதவிப்பு. அவ்வளவே.

    --

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!