Thursday, June 10, 2010

விக்ரமாதித்தனின் அரியணைகள்

அரியணை மேலிருந்து

தர்ம புத்தி கொண்ட

குருவியோட்டிக்கும் எனக்கும்

பெரிய வித்யாசமில்லை.



அரியணையில் ஏறுவதும் இறங்குவதுமாகவே

ஒவ்வொரு பொழுதும் கழிகிறது



அரியணை இன்பம்

புரியாத மயக்கம்

எப்பொழுதும் தொடர்கிறது



இறங்கின இன்பம்

புரியாத மயக்கம் கூட

அவ்வப்போது தொடர்வதுண்டு.



எல்லோருக்கும் கிடைத்திருக்கும்

கூடவே தூக்கித்திரியும் படியான

விக்ரமாதித்தனின் அரியணைகள்.



(குருவியோட்டி அரியணை இருந்த பூமியில் நின்றபோது, சுற்றிலும் நல்லதும், இன்பமும் கண்டான், அரியணை விட்டு நகர்ந்த போதோ தன்னை மட்டுமே கண்டான்)

No comments:

Post a Comment

என்ன சொன்னாலும் தப்பில்ல !!