சாயங்கால வானம் பார்த்து
டீ அருந்தினால்
-----அழகியல்
குடித்ததும் நானே அதை
கழுவி கவிழ்த்தால்
------இருத்தலியல்
தூளும் பாலும் சர்க்கரையும்
சேர்ந்து டீ உருவானால்
-------வேதியியல்
அடுப்பை பற்ற வைத்தலால்
வெம்மை உருவானால்
-------இயற்பியல்
அடுப்பு பற்ற வைக்குமுன்
விளக்கேற்றி
கைகளை குவித்தால்
--------கடவுளியல்
கைகளை குவிக்கக்கூடாது
என்பதை நினைத்துக்கொண்டால்
--------கடவுள் இல்லா இயல்
கைகளை குவிக்கக்கூடாது
என்பதை தீவிரமாக நினைத்துக்கொண்டால்
--------பெரியாரியல்
கைகளோ, விளக்குகளோ
ஞாபகமே இல்லாவிட்டால்
---------
---------
--------- அது.... மறதியியல்.
No comments:
Post a Comment
என்ன சொன்னாலும் தப்பில்ல !!