Friday, June 11, 2010

டீ - கால தத்துவங்கள்

சாயங்கால வானம் பார்த்து

டீ அருந்தினால்

-----அழகியல்



குடித்ததும் நானே அதை

கழுவி கவிழ்த்தால்

------இருத்தலியல்



தூளும் பாலும் சர்க்கரையும்

சேர்ந்து டீ உருவானால்

-------வேதியியல்



அடுப்பை பற்ற வைத்தலால்

வெம்மை உருவானால்

-------இயற்பியல்



அடுப்பு பற்ற வைக்குமுன்

விளக்கேற்றி

கைகளை குவித்தால்

--------கடவுளியல்



கைகளை குவிக்கக்கூடாது

என்பதை நினைத்துக்கொண்டால்

--------கடவுள் இல்லா இயல்



கைகளை குவிக்கக்கூடாது

என்பதை தீவிரமாக நினைத்துக்கொண்டால்

--------பெரியாரியல்



கைகளோ, விளக்குகளோ

ஞாபகமே இல்லாவிட்டால்

---------

---------

--------- அது.... மறதியியல்.

No comments:

Post a Comment

என்ன சொன்னாலும் தப்பில்ல !!