Wednesday, June 16, 2010

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்

வெகு அழகாய் உருவம்


உலகை உள்வாங்கும் அறிவு

அவ்வறிவை வெளிப்படுத்தும் ஆற்றல்

பகைமை கொள்ளாத  நேசம்

சார்ந்து விடாத பாசம்

ஆமாமாம்

என்னைபார்த்து நானே வியந்துதான் போகிறேன்



கருத்தான விவாதங்கள்

அறிவு ததும்பும் நட்புகள்

பிறர்க்கு உழைக்கும் பேச்சுக்கள்

வெகுசிலரே படிக்கும் நூல்கள்

என்று என் உலகம்

மிகவும் உயர்ந்ததாய் இருக்கிறது !!



உதவி செய்யும் கரங்கள்

மன்னிக்கும் மனது

ஓயாத உழைப்பு

தாராள சிரிப்பு

ஆம் ...இந்தப் பெருமை அளப்பரியதாயிருக்கிறது.



நான் எனும் மூர்க்கம்

பாம்பைப்போல் சீற்றம்

தனிமை என்னும் பாரம்

உறுதி எனும் வாழ்வு

உயர்வு பெருமை வியப்பு ஏதுமில்லை



கண்கள் நிலைக்கிறது

வெளி, வெளி பெருவெளி

ஏதுமில்லாப் பெருவெளி

3 comments:

  1. உலகம் நம்மை விரும்பும் முன் நாம் நம்மை விரும்ப வேண்டும்!

    :)

    நானும் இப்போ உங்க பாலோயர்!

    ReplyDelete

என்ன சொன்னாலும் தப்பில்ல !!