கருத்துகளை மாற்றிக்கொள்ளாமல்
தான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால் என
பிடிவாதமாய் இருப்பவர்கள் --
மிகவும் சிரமம்
இவர்களிடம் பேசாமலே இருந்துவிடலாம்.
என்னோடு ஒத்த கருத்துகள் உள்ளவர்கள்
நல்லவர்கள் வல்லவர்கள் --
ஆனாலும் எதைப் பேசினாலும்
நானும் ஆமோதிக்கிறேன் என்று
ஒத்து ஊதினால்
அதற்கு மேல் பேச என்னதான் இருக்கிறது?
ஆகக்கூடி எனக்கு தேவையானவர்கள்
சிறிது நேரமேனும்
எனக்கு எதிராய் பேசி
முடிவில் என்னிடம் தோற்றே ஆகவேண்டிய
இனிதான நட்புகள்....
அதுவே
ஆயின் .....தொடர்பு கொள்க.
இப்ப நான் என்ன செய்ய!?
ReplyDeleteஉங்கள் பாடலில் குற்றம் இருக்குறது!
ReplyDeleteஆனால் சொற்குற்றமா, பொருட்குற்றமான்னு தான் தெரியல!
//
ReplyDeleteஆகக்கூடி எனக்கு தேவையானவர்கள்
சிறிது நேரமேனும்
எனக்கு எதிராய் பேசி
முடிவில் என்னிடம் தோற்றே ஆகவேண்டிய
இனிதான நட்புகள்....
//
எனக்கும் தான் :)))
நல்லாருக்கு...
///உங்கள் பாடலில் குற்றம் இருக்குறது!
ReplyDeleteஆனால் சொற்குற்றமா, பொருட்குற்றமான்னு தான் தெரியல! ///
என்ன குற்றம் கண்டீர்? நக்கீரரே !! என்ன குற்றம் என்று மீண்டும் ஒருமுறை கண்ணாடி போட்டு படித்துவிட்டுச் சொல்லவும் !
--
//
ReplyDeleteஎனக்கும் தான் :)))
நல்லாருக்கு... /////
கிடைக்க வாழ்த்துக்கள் !!
/////இப்ப நான் என்ன செய்ய!? /////
ReplyDeleteஅது தெரிஞ்சா நீங்க எதுக்கு பரிணாமம் பத்தி ப்ளாக் எழுதப் போறீங்க..... !!!
Vaal Sir, நீங்க என்ன வேண்ணாலும் செய்ங்க சார்....