வந்தது கருவுல
போறது எதுவர?
யாருக்கும் தெரியல
தேடலும் நிக்கல !!!
நேத்து நடந்தது
நாளைக்கு நடப்பது
ஏன்னு தெரியணும்
எதுக்குன்னு புரியணும் !
அன்பு வச்சாலும் கேள்வி
வைக்காட்டியும் கேள்வி
நம்புனாலும் கேள்வி
நம்பாட்டியும் கேள்வி !
காசு வந்தாலும் கேள்வி
வராட்டியும் கேள்வி
செத்தாலும் கேள்வி
சாக அடிச்சாலும் கேள்வி !
ஒருநாள் பொழப்புக்கு
யோசிச்சவன் முட்டாளு
பலநாள் பொழப்புக்கு
யோசிச்சவன் புத்திசாலி !
ஆயுளுக்கும் சேத்துவச்சு
யோசிச்சவன் அறிவாளி
யுகத்துக்கும் பொறுப்பெடுத்து
யோசிச்சவன் ஆன்மீகி !
இந்த நொடி சந்தோஷத்தை
ஒருநாளும், பலநாளும்
ஆயுளும், யுகமுமாய்
யோசிச்சு தொலைச்சுட்டு,
என்ன பேரெடுத்தா
யாருக்கு என்ன வரும்?
அலுப்பும் சலிப்பும்தான்
சாக்காடு தேடிவரும் !
ஏன் அலுப்பு?
ReplyDeleteஅலுப்பு எனக்கில்லை பத்மா !
ReplyDeleteசலிப்பாயும், அலுப்பையும் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும்,
அந்தந்த நிமிடங்களின் சுகத்தில் திளைக்க முடியாதவர்களின் இயலாமை குறித்த பரிதவிப்பு. அவ்வளவே.
--